மதுரை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலூர் பகுதியில் உள்ள தெற்கு தெரு கால்வாய் ஓடையில் நேற்றிரவு ஒரு கும்பல் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மேலூர் பகுதியைச் சேர்ந்த காளை, அழகேந்திரன், மாதவன், கருப்பன், அலங்காரன் சேது என்பது தெரியவந்தது.மேலும், மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த மணல் கடத்தல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-தேனி முருகேஸ்வரன்.