நிறைய நண்பர்கள் ‘அது என்ன வழி’ என்றுகேட்கத் தொடங்கிவிட்டார்கள். வேறு சிலர் அது என்ன பவுடர் என்கிறார்கள். நம்ப முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ஜெபமணி மோகன்ராஜ் அவர்களுக்கு அவசரமோ அவசரம். அதனால் அனைவருக்குமாக கூறிவிடுகிறேன்.
ரொம்ப சின்னதா ஒரு அட்டை பெட்டி. உடைத்த பாதி தேங்காய் அளவிற்கு இருந்தால் போதும். கூடவே ஒயர் இணைப்புடன் ஜீரோ வாட்ஸ் பல்ப். இப்போது கற்பூரவள்ளி செடி இலையை ஒரு 15 பரித்துக்கொள்ள வேண்டும். (என் வீட்டு மாடியில் நிறைய கற்பூறவள்ளி செடி வைத்துள்ளேன்.) அந்த இலையை சிறிய அட்டைப்பெட்டியில் போட்டு, அடுக்கி, அதன்மீது ஜீரோ வாட்ஸ் பல்ப்பை வைத்துவிட வேண்டும்.
இப்போது சுவிச் போட்டவுடன் லைட் எரியும். மிதமான வெப்பம் வரும். அந்த வெப்பத்தில் கற்பூரவள்ளி தழைகள் அப்படியே ஆவியாகும். பிறகென்ன வீடுமுழுக்க நல்ல நறுமனம். அந்த கற்பூரவள்ளி நெடியில் ‘கொசு’ அண்ணாச்சி, நம்ப மன்மோகன் சிங் மாதிரி மௌனமாயிடுவாரு. 2-ஜி ன்னு சொன்னவுடனே பிரதமர் பதறி ஓடுற மாதிரி கொசு ஓடிடும்.மறு பேச்சி, ஒரு வார்தை இருக்காது. ரசாயண நெடி ஏதுமிருக்காது. நல்ல மூலிகை காற்று. இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நல்லது. அமைதியான தூக்கம்.பக்க விளைவுகள் ஏதுமில்லை. தினமும் இதைத்தான் பயன்படுத்தி வருகிறேன்.
நேற்று நல்ல மழை. மாடிக்கு போக முடியல. கற்பூரவள்ளி தழையை பறித்து வைப்பதில் ‘கௌவர்மெண்ட்’ சோம்பேறித்தனம். அதன் விளைவுதான் முன்ன எழுதின ‘அவதார’ வேஷம்.