பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்த மதுரை ஆதினம் அருணகிரி நாதரின்
கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அருணகிரி நாதரின் கருத்து ஏற்புடையது அல்ல என இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இது காலம் கடந்த
தவறான கருத்து எனவும் தா. பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை ஆதினத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட
கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பெண்கள் மீதான பாலியல்
வன்கொடுமைக்கு அவர்களே காரணம் என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருப்பதாக
கூறினார். ஆதினத்திற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வது அவர்களை
இழிவுபடுத்தும் செயலாகும் எனவும் ஜி.ராமகிருஷ்ணன் குறை கூறியுள்ளார்.
மதுரை ஆதினம் சர்ச்சைக்குரியவர் என்பதால், அவர் கூறும் கருத்துக்களும்
அவ்வாறே இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன்
தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது
என்றும் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
-தேனி முருகேஸ்வரன்.