மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது. இதில் வீரர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு காளைகளை அடக்கி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பார்வையாளர்கள், அறிவிப்பாளர்கள் அமர்ந்திருந்த மேடை சரிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. பாதுகாப்பு ஏற்பாட்டை உறுதி செய்த பின் போட்டி தொடர்ந்து நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
-தேனி முருகேஸ்வரன்.