தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com

விவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம்


 
ரகரிசியுடன் தினையைச் சேர்த்து பனியாரம், சோளத்தைச் சேர்த்து போண்டா என தொடங்கி வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, முடக்கத்தான் தோசை என உயிர்ச்சத்தான உணவுகளின் பட்டியல் நீள்கிறது, உழவன் உணவகத்தில்.
உழவன் உணவகம், முழுக்க முழுக்க விவசாயிகளால் நடத்தப்படும் இந்த உணவகம் மதுரையில் செயல்பட்டு வருகிறது. மற்ற உணவகங்களைப் போல இல்லாமல், கம்பு, தினை,சோளம், கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களால் இங்கு உணவுகள் தயாராகின்றன.
மாறிவரும் கலாச்சாரத்தின் தாக்கம் உடைகளில் மட்டுமல்ல, உணவுப் பழக்க வழக்கங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் மனிதனின் ஆரோக்கியம் கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், தானிய உணவுப் பொருட்களை பிரதானமாகக் கொண்டு செயல்படுகிறது ஒரு உணவகம்.
கலாச்சார மாற்றத்தில் பாரம்பரியத்தை மறந்த பலர், உழவன் உணவகத்திற்கு வந்து சாப்பிடுவதைப் பார்க்கமுடிகிறது. முற்றிலும் இயற்கையான உணவு வகைகள் என்பதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த உணவகத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். சத்தான உணவு மட்டுமின்றி நிலா வெளிச்சத்தில் கயிறு கட்டிலில் அமர்ந்தவாறு சாப்பிடும் வசதியும் உழவன் உணவகத்தில் உள்ளது.
உணவு வகைகளோடு, கேழ்வரகு முருக்கு, கேழ்வரகு பிஸ்கட், பாசிப்பருப்பு அல்வாஎன உடலுக்கு ஆரோக்கியம் தரும் நொறுக்குத் தீனிகளும் விற்கப்படுகின்றன. இதுதவிர, சுப நிகழ்ச்சிகளின் விருந்துகளுக்கு இங்கு ஆர்டர்களும் வாங்கப்படுகின்றன.
பீட்ஸா,பர்கருக்காக குளுகுளு உணவகங்கள் அதிகம் முளைக்கும் இந்த காலக்கட்டத்தில், உழவன் உணவகங்கள் வரவேற்கப்பட வேண்டியது அவசியம்.