மதுரை ஆதீன மடத்தில் நித்யானந்தா நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆதீனம் அருணகிரி நாதர் தொடர்ந்த வழக்கில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு முடியும் வரை நித்யானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் நுழையக் கூடாது என்று நீதிபதி குருவையா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.